10.12.04

ஊருக்கும் வெட்கமில்லை

படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: ஜேசுதாஸ்
எழுதியவர் - தெரியவில்லை


ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..!

8.12.04

நதி எங்கே வளையும்...?

உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்

நதி எங்கே வளையும்
கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்குத் தெரியும்

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.

எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை

நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...

கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை

இப்பாடல் எனது பார்வையில்

7.12.04

தகிடததுமி தகிடததுமி தந்தானா

படம் - சலங்கை ஒலி
பாடியவர் - பாலசுப்ரமணியம்
இசை - இளையராஜா

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் ...
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.

இப்பாடல் எனது பார்வையில்

6.12.04

நலந்தானா நலந்தானா

படம் - தில்லானா மோனாம்பாள்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................
............................

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

இப்பாடல் எனது பார்வையில்

4.12.04

பாப்பா.. பாப்பா கதை கேளு

படம். எங்க பாப்பா
பாடியவர் ஏ.எல். ராகவன்


பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையிலே வெங்காய வடையிருக்கு
வடையை காக்கா திருடிச்சாம்
காக்கா மரத்திலை குந்திடிச்சாம்

காக்கா மூக்கிலை வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடிச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
நரி ஒரு தந்திரம் பண்ணிச்சாம்
காக்காப் பாட்டு பாடுண்ணு
குள்ளநரியுமே கேட்டிடுச்சாம்

வாயைத்திறந்து காக்கா பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
விழுந்ததை நரியும் கவ்விடிச்சாம்
வாயிலை போட்டு தின்னுடிச்சாம்.

பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

30.11.04

எனக்குப் பிடித்த பாடல்

"யூலிகணபதி" யில் பாலசுப்ரமணியம்
Music - Ilayaraja

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

22.11.04

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

பாடல்: கண்ணதாசன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

18.11.04

அச்சம் என்பது மடமையடா

படம் - மன்னாதி மன்னன்
பாடல் - கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

15.11.04

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே!

படம் - காஞ்சித்தலைவன்
பாடல்வரிகள் - மு.கருணாநிதி
பாடியவர்- சி.எஸ்.ஜெயராமன் குழுவினருடன்

வெல்க நாடு வெல்க நாடு
வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு
செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே

தாயின் ஆணை கேட்பதுக்கு
தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம்
காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா

குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தம்
உன் குன்று தோளில் புது பலத்தை
வளங்குமடா நித்தம்
சென்று வா வென்று வா

மகிமை கொண்ட மண்ணின் மீது
எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா
வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள்
சென்று வா வென்று வா

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா - அவர்
ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா - அவர்
கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே

14.11.04

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!

படம் - மறுபடியும்
பாடியவர் - எஸ்.பி.பாலா
வரிகள் - வாலி


நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!

8.11.04

பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?

படம் - அரசகட்டளை
பாடியவர் - பி.சுசிலா

பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்
தண்ணீரும் இரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல ஆகலாமா..!

ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமற் தோன்றும் வீரர் சொந்த நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டது இந்த நாடு!

அடிமை வாடும் பாடம் இன்று படிக்கலாமா
நல்ல அமுதமென்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
தன்னலத்தில் இன்பங்காண நினைக்கலாமா
பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா..!

பகுத்தறிந்து வாழ்பவனைச் சரித்திரம் பேசும்
அவர் பரம்பரையின் கால்கள் மீது மலர்க்கணை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவன் பால் குடித்த தாயைக் கூட பேயெனப் பேசும்!

குடித்த பாலில் வீரம் கலந்து
கொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பின்னும் குருடாய் இருந்தால்
கோழை என்பாள் உன்னை
உரிமைக் குரலை உயர்த்தி இங்கே
விடுதலை காணத் துடித்துவா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே எழுந்து ஓடிவா!

இறைவன் உலகத்தைப் படைத்தானா?

படம்- உனக்காக நான்
பாடியவர்-யேசுதாஸ்
எழுதியவர்-கண்ணதாசன்


இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன்தான் படைத்தானா?
ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்

இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல்போலே
பட்டம் போலவர் பளபளப்பார்
நூல் போலே இவர் இளைத்திருப்பார்

இரு வேறியக்கம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

இறைவன் இங்கே வரவில்லை
எனவே நான் அங்கு போகின்றேன்
வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே
மறுபடி ஒருநாள் நான் வருவேன்.

29.9.04

அன்பான தாயை விட்டு எங்கே நீ...

படம் - மகாநதி

அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட
பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து
கரையில் உன்னைத் தேடிடும்
காணாமல் வருத்தப் பட்டுத்
தலை குனிந்து ஓடிடும்
ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும்
வேரு விட்ட இடம்
இதை விட்டால் உன்னை வாழ வைப்பது
வேறு எந்த இடம்

தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை
மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு
கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்
காலம் விட்ட வழி