வரிகள் - பா.விஜய்
படம் - Autograph
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!
31.3.05
24.3.05
வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு
படம்-விக்ரமாதித்தன்
பாடியவர்-பி.சுசீலா
வரிகள்- கண்ணதாசன்
வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு
சொன்தை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உயிரங்கே உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு
உயிரிழந்து மகிழ்விழந்து உருகுவதாய்ச் சொல்லு
உடலிழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு
ஆடுமயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு
அழகுநிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு - நான்
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு
வருவதற்குள் நீ விரைந்து வந்து பதில் சொல்லு
பாடியவர்-பி.சுசீலா
வரிகள்- கண்ணதாசன்
வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு
சொன்தை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உயிரங்கே உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு
உயிரிழந்து மகிழ்விழந்து உருகுவதாய்ச் சொல்லு
உடலிழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு
ஆடுமயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு
அழகுநிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு - நான்
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு
வருவதற்குள் நீ விரைந்து வந்து பதில் சொல்லு
Subscribe to:
Posts (Atom)