15.5.06

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

படம் : வாழ்க்கைப்படகு
பாடியவர் : PB Srinivas
வரிகள் : கண்ணதாசன்
இசை : MSV

பாடல் ஒலி வடிவில்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன ?
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன ?
பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று)

பாவை உன் முகதைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததது கனவோ என்று
வாடினேன் தனியாய் நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று)

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

படம்: நீங்காத நினைவு
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடிப்பு: விஜயகுமாரி

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ