17.5.06

துள்ளாத மனமும் துள்ளும்

படம் : கல்யாணப் பரிசு (1959)
பாடியவர் :
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்

(துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்

(துள்ளாத)

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

படம் : பதிபக்தி (1958)
பாடியவர் :
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :


வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்
ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்
தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே
விட்டுப்போனபோது அழுதவள்ளி
புதுமையான நிலையில் - அல்லி
பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்

(வீடு)